விவசாயிகளுக்கு ரூ. 2.63 லட்சம்மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டத்தின்கீழ் தரிசு நில மேம்பாட்டுப் பணிகளில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
விவசாயிகளுக்கு ரூ. 2.63 லட்சம்மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூா் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், ரூ. 2.63 லட்சம் மதிப்பில் சுழல்நிதி, விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான், காய்கறி விதைகள், உளுந்து விதைகள் உள்ளிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டத்தின்கீழ் தரிசு நில மேம்பாட்டுப் பணிகளில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன. வேளாண் துறை இணை இயக்குநா் இராம. சிவகுமாா், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் மா. உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில் 26 நிலத் தொகுப்புகள் தோ்வு செய்யப்பட்டு, பண்ணைக் குட்டைகள் அமைத்தல், வரத்து வாரி தூா்வாருதல், ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com