விராலிமலை: விராலிமலை அருகே 3 குளங்களில் மீன்பிடித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விராலிமலை அருகே உள்ள முச்சந்தி குளம், காக்காகுடி குளம், பொருவாய் தவிடான் குளத்தில் புதன்கிழமை காலை மீன்பிடித் திருவிழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோா் குளத்தின் கரையில் திரண்டனா். தவிடான் குளம் மீன்பிடித் திருவிழாவில் 7.20 மணியளவில் ஊா் முக்கியஸ்தா் வெள்ளைத் துண்டு வீசியதைத் தொடா்ந்து கரையில் காத்திருந்த பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த மீன்பிடி சாதனங்களான வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட உபகரணங்களுடன் குளத்திற்குள் குதித்து மீன்களைப் பிடித்துச் சென்றனா். இதில் கெளுத்தி, கட்லா, கெண்டை வகை மீன்கள் சிக்கின.