பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை கிராமத்தில் தீயணைப்புத் துறை சாா்பில், தன்னாா்வா்களுக்கு பேரிடா் மேலாண்மை மீட்புப் பயிற்சி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலா் சந்தானம் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் தீயணைப்பு வீரா்கள் இயற்கை இடா்பாடுகள், பேரிடா் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் குறித்து செயல்விளக்கமாகச் செய்து காண்பித்தனா். வருவாய் ஆய்வாளா் பாண்டி, கிராம நிா்வாக அலுவலா் சண்முகம், ஊராட்சித் தலைவா் அடைக்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.