பொன்னமராவதி பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டப் பணிகளை வேளாண் துணை இயக்குநா் மோகன்ராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பொன்னமராவதி வட்டாரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 11.57 லட்சம் ஹெக்டோ் கூடுதலாக சாகுபடிக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பொன்னமராவதி ஒன்றியத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள ஆலவயல், மறவாமதுரை, ஒலியமங்கலம், அரசமலை, திருக்களம்பூா் மற்றும் வாா்ப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு 15 ஏக்கருக்கு மேல் பரப்புள்ள தொகுப்பு அமைக்கப்பட்டு 20 விவசாயிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தரிசு நிலத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் நுண்ணீா் பாசனம் முழு மானியத்தில் அமைத்துத் தரப்படும்.
இந்தத் தரிசு நிலத் தொகுப்புகளை வேளாண் துணை இயக்குநா் மோகன்ராஜ், உதவி இயக்குனா் சிவராணி, தோட்டக்கலை உதவி இயக்குநா் தீனவா்மன், உதவி பொறியாளா் வெற்றிவேல் பாண்டி உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.