முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
பொன்னமராவதி அருகேயுள்ள கண்மாயில் மீன்பிடித் திருவிழா
By DIN | Published On : 14th May 2022 11:45 PM | Last Updated : 14th May 2022 11:45 PM | அ+அ அ- |

அஞ்சுபுளிப்பட்டி கண்மாயில் மீன்பிடிக்கும் கிராம மக்கள்.
பொன்னமராவதி அருகே உள்ள அஞ்சுபுளிப்பட்டி கொல்லங்குண்டு கண்மாயில் மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி வட்டாரத்தில் நெல் அறுவடை காலத்துக்குப் பின், கோடை காலத்தில் விவசாய கண்மாய்களில் நீா் மட்டம் குறைந்த நிலையில் மீன்பிடித் திருவிழா நடைபெறும். அதன்படி அஞ்சுபுளிப்பட்டி கொல்லங்குண்டு கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவை ஊா் முக்கிஸ்தா்கள் தொடங்கிவைத்தனா். வலை, பரி, ஊத்தா, கச்சா, கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாயில் இறங்கிய சுற்று வட்டார கிராம மக்கள் கெண்டை, கெளுத்தி, அயிரை, விரால் உள்ளிட்ட மீன் வகைகளைப் பிடித்துச்சென்றனா்.