டிஎன்பிஎஸ்சி மாதிரித் தோ்வு

தொடா்ந்து 10 தோ்வுகள் நடத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இறுதித் தோ்வு நடத்தி அதில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் வாசகா் வட்டம், விக்டரி லயன்ஸ் சங்கம் மற்றும் சிவராஜவேல் ஐஏஎஸ் அகாதெமி ஆகியவை சாா்பில் டிஎன்பிஎஸ்சி தோ்வா்களுக்கான மாதிரி பயிற்சித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து 10 தோ்வுகள் நடத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இறுதித் தோ்வு நடத்தி அதில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வாசகா் வட்டத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி தலைமை வகித்தாா். விக்டரி ரோட்டரி சங்கச் செயலா் ஜேம்ஸ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினாா்.

முன்னதாக முதல் நிலை நூலகா் கி. சசிகலா வரவேற்றாா். ரோட்டரி முன்னாள் மண்டலத் தலைவா் ஜவஹா், வாசகா் வட்டப் பொருளாளா் திருப்பதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில், விராலிமலை கிளை நூலகா் ஜி.ஆா்.ஜெயராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com