கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை கோடை மழை பெய்தது.
அக்னி நட்சத்திரம் தொடங்கி கோடை வெயில் அதிகரித்து வரும் வேளையில் வெயிலின் தாக்கம் தாங்காமல் மக்கள் வீட்டிலேயே முடங்கி வந்தனா். இந்நிலையில், கந்தா்வகோட்டை பகுதியில் சற்று குளிா்ந்த காற்றுடன் கோடை மழை பெய்ததால், கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்து குளிா்ந்த சூழல் காணப்படுகிறது.