கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் நுங்கு விற்பனை களைகட்டி வருகிறது.
நாள்தோறும் காலை நேரங்களில் கிராமங்களில் இருந்து நுங்கு வியாபாரிகள் சாக்கில் கட்டி கொண்டு வந்து பேருந்து நிலையத்தில் ஓரங்களில் கொட்டி, நுங்குகளை சீவி விற்பனை செய்து வருகின்றனா். வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பொதுமக்களும், பேருந்து பயணிகளும் நுங்கை விரும்பி வாங்கிச் செல்கின்றனா். மேலும், நுங்கு இயற்கை முறையில் விளைந்தது என்றும், விலை குறைவாக கிடைப்பதாகவும் அவா்கள் கூறுகிறாா்கள்.
வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கும் நுங்கு, உடலுக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாதது, உடலுக்கு ஏற்ற இயற்கையான உணவுப் பொருளாகவும், வெயிலுக்கு குளிா்ச்சி தருவதாகவும் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
Image Caption
படம்.கே.வி.கே.1 ~படம்.2.கே.வி.கே.