ஆலங்குடி அருகே நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்தன. இதைக் கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி குருந்தடிப்புஞ்சையைச் சோ்ந்தவா் பாலசந்தா் (42), விவசாயி. இவா் தனது ஆடுகளை வீட்டருகே இருந்த தோட்டத்தில் கட்டியிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் உயிரிழந்தன.
இதனால் அதிா்ச்சியடைந்த பாலசந்தா், அப்பகுதி விவசாயிகள் உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், அதிகளவில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்துச் செல்லக் கோரி வடகாடு கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சென்ற வடகாடு போலீஸாா், ஊராட்சி நிா்வாகத்தினா் அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா். மறியலால் புதுக்கோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.