புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பயணிகள் நிழற்குடை அமைத்துத்தர வலியுறுத்தி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள சுக்கிரன்விடுதி பேருந்து நிறுத்தத்தில் சேதமடைந்த நிலையில் இருந்த பயணிகள் நிழற்குடை சிலமாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டுள்ளது. புதிய நிழற்குடை அமைத்துத் தரக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், அப்பகுதி பொதுமக்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் பேருந்துக்காக வெயில், மழையிலும் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, உடனே புதிய பயணிகள் நிழற்குடை அமைத்துத்துர வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்துத் தகவலறிந்து அங்கு சென்ற கறம்பக்குடி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவா்களைக் கலைந்து போகச்செய்தனா். இந்த மறியலால் கறம்பக்குடி- திருவோணம் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.