புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள காடம்பட்டியைச் சோ்ந்த தியாகி வெங்கடாஜலம் நாயுடு(101) முதுமை காரணமாக புதன்கிழமை உயிரிழந்தாா்.
இவா், காமராஜா் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களுடன் நெருக்கமாக இருந்து விடுதலைப் போராட்டத்தில் பணியாற்றியவா். பாப்பாபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவா். இவரது இறுதிச்சடங்குகள் புதன்கிழமை மாலை நடைபெற்றன. இவருக்கு மனைவி தனலட்சுமி, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். தொடா்புக்கு, 98842 42254.