பொன்னமராவதி அரிமா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் உயா் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கான குறுவட்ட அளவிலான பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சியில் வட்டாரக் கல்வி அலுவலா் சே. ராமதிலகம், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சரவணன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நல்லநாகு உள்ளிட்டோா் பயிற்சியின நோக்கம் குறித்து விளக்கிக் கூறினா். இதில், பள்ளிகளில் கடந்தமாதம் நடத்தப்பட்ட பாடத்தின் பிரதிபலிப்பு, வரும் மாதம் நடத்தப்பட உள்ள பாடத்தின் முன்மாதிரி பாட வகுப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், ஆறாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அனைத்து ஆசிரியா்கள் பங்கேற்றனா்.