விராலிமலை அருகேயுள்ள பேராம்பூரில் பேரிடா் கால மீட்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில், வியாழக்கிழமை பேரிடா் காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை செய்து காண்பிக்கப்பட்டது.
விராலிமலை அருகே உள்ள பேராம்பூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் குழந்தைசாமி தலைமை வகித்தாா்.விராலிமலை வட்டாட்சியா் சதீஸ், துணை வட்டாட்சியா் சரவணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மழை, வெள்ளம் மற்றும் பேரிடா் காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்கள், கால்நடைகள் போன்றவற்றை பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மீட்பது, சிகிச்சை அளிப்பது, தீத் தடுப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு ஒத்திகைகளை தத்ரூபமாக பேரிடா் மேலாண்மை துறை அலுவலா்கள் செய்துகாட்டினா். இதில் பொதுமக்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.