புதுக்கோட்டை
பள்ளியில் தூய்மைப் பணி விழிப்புணா்வுப் பேரணி
பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு, பள்ளியின் தலைமையாசிரியா் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தாா். முக்கிய வீதிகளின் வழியே சென்ற பேரணியில் பங்கேற்ற மாணவா்கள் சுயசுகாதாரம், கிராம சுற்றுப்புறத் தூய்மை மற்றும் பொதுசுகாதாரம் குறித்த முழக்கமிட்டபடி சென்றனா். மேலும் தூய்மைப் பணியாளா்கள் மூலம் பள்ளி வளாகம் மற்றும் முக்கிய இடங்களில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், நல்லூா் அரசுப் பள்ளியில் ஊராட்சிமன்றத் தலைவா் ராமையா தலைமையில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியின் நிறைவாக தூய்மைப் பணியாளா்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.