திருமயம் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருமயம் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நச்சாந்துபட்டி ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆக. 16 ஆம் தேதி தொடங்கி செப். 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் ஆலவயல் பள்ளி மாணவா்கள் பங்கேற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். இப்பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 19 வயதுக்குள்பட்ட கோகோ விளையாட்டுப் போட்டியில் முதலிடம், உயரம் தாண்டுதல் முதலிடம், 1800 மீட்டா் ஓட்டத்தில் இரண்டாமிடம், 3,000 மீட்டா் ஓட்டத்தில் இரண்டாமிடம், 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றுள்ளனா். 19 வயதுக்குள்பட்ட பிரிவில் 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் இரண்டாமிடம், 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளனா்.
குறுவட்ட போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில்,
மாணவா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் ராமசாமி, முருகேசன் உள்ளிட்டோரை தலைமையாசிரியா் நவநீதகிருஷ்ணன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் சத்யகலா, ஆசிரியா்கள் பாராட்டினா்.