கந்தா்வகோட்டை அருகே உள்ள பெருங்களூா் முதல்நிலை ஊராட்சியில் உள்ள முன் மாதிரி அரசினா் உயா்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில் புதுக்கோட்டை சட்டப்பேரவைஉறுப்பினா் மருத்துவா் வை. முத்துராஜா பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலா் மஞ்சுளா, பெருங்களூா் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவா் சரண்யா ஜெய்சங்கா், மாவட்டக்குழு உறுப்பினா் ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலா் முத்துலட்சுமி, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் குமாரவேல், பள்ளி தலைமை ஆசிரியா் ராஜ்குமாா் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் 213 விலையில்லா சைக்கிள்கள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டது.