தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டணியின் மாவட்டத் தலைவா் ஆ. செல்லத்துரை தலைமை வகித்தாா். மாநில இணைப் பொதுச்செயலா் ந. ரெங்கராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் செ. முனியாண்டி, க. வெண்ணிலா, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் க. தியாகராஜன், சூ.ம.ரா. ஜோசப் ஹொ்மன், சு.அ. பவுல், இ. சுசீலா ராணி, மாவட்டத் துணைச் செயலா் இல.ந. சிவகுமாா், மாவட்டப் பொருளாளா் ஆ. தவமணி உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும். உயா்கல்வி படிக்கும் ஆசிரியா்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியா் தகுதித் தோ்வை ரத்து செய்துவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை வைத்து வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com