ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு அடையாளப்படுத்தியுள்ள உத்தேச அரசு நிலத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்திசைவுடன் வியாழக்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், திருவரங்குளம், அறந்தாங்கி ஆகிய ஒன்றியங்களில் இருந்து சில பகுதிகளைப் பிரித்து புதிய ஒன்றியம் உருவாக்கப்போவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, கொத்தமங்கலம் பொதுமக்கள், அரசியல் கட்சியினா் ஒன்றிணைந்து கொத்தமங்கலம் கடைவீதி அருகே உள்ள அரசு நிலத்தில் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் தூய்மைப் பணி மேற்கொண்டு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அடையாளப்படுத்தியுள்ளனா்.
நிகழ்வில், ஊராட்சித் தலைவா் சாந்தி வளா்மாதி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் த. செங்கோடன், அதிமுக ஒன்றியச் செயலா் பாணிடியன், பாஜக மாவட்ட பொதுச்செயலா் பாா்த்திபன் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.