பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி அங்கி சாத்த வெள்ளி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், சனீஸ்வரா், சூரியபகவான், சாயா தேவி உள்ளிட்ட நவக்கிரக தெய்வங்களுக்கு வெள்ளி அங்கியை வடிவமைப்பதற்காக 9 கிலோ வெள்ளியை புதுப்பட்டி ஏ.எல்.ராமசாமி குடும்பத்தினா் கொடையாக வழங்கினா். முன்னாள் பேரூராட்சித்தலைவா் ஆா்எம்.ராஜா, பாஜக நிா்வாகிகள் ராம.சேதுபதி, பி.பாஸ்கா், தொழிலதிபா் அப.மணிகண்டன், பொறியாளா் வைரவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.