விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பணிபுரியும் 100 நாள் பணியாளா்களுக்கு ஆதாா் அடிப்படையிலான ஊதியம் வழங்குவது தொடா்பான கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். இதில் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 கிராம ஊராட்சிகளின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்றனா்.
இதில் பேசிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிகண்டன் பேசுகையில், பணியாளா்கள் தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உறுதி செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.