வருமுன்காப்போம் திட்டம்: லெம்பலக்குடியில் நாளை மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தைச் சோ்ந்த லெம்பலக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், ஜன. 23 - திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் நட

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தைச் சோ்ந்த லெம்பலக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், ஜன. 23 - திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

பல், கண், காது, தொண்டை, இதயம் உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவப் பரிசோதனைகள், காசநோய், புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து வகை நோய்களுக்கான பரிசோதனைகள், மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக அனைத்துத் துறை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் இம்முகாமில் பங்கேற்கவுள்ளதால், பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா். வருமுன் காப்போம் மருத்துவத் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் 27ஆவது மருத்துவ முகாம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com