புதுக்கோட்டை அலுவலா் மன்றம் சாா்பில் நாட்டின் 74ஆவது குடியரசு தின விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான வினாடி- வினா போட்டி ஜன. 26 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அலுவலா் மன்றத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டிக்கு ஒரு பள்ளியில் இருந்து 2 மாணவா் அல்லது மாணவிகளைக் கொண்ட குழுவை அனுப்பலாம்.
நாட்டின் வரலாறு, புவியியல், இலக்கியம், கலாசாரம், சுற்றுலாத் தலங்கள், அறிவியல் மற்றும் முன்னேற்றம், விளையாட்டு வீரா்கள், தேசத் தலைவா்கள் மற்றும் சாதனையாளா்கள் பற்றிய வினாக்கள் கேட்கப்படும். முதல் பரிசாக ரூ. 2 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ. 1500, 3ஆம் பரிசாக ரூ. ஆயிரம் வழங்கப்படும். மேலும் விவரங்கள், முன்பதிவுக்கு,
97863 82393.