புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 312 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமைவகித்து மனுக்கள் பெற்று அலுவலா்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கினாா். கூட்டத்தின்போது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய நாள்காட்டி, அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, சமூகப் ப ாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பா. சரவணன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.