புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில், மாணவா் பேரவையை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ் ரகுபதி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் வை. முத்துராஜா, புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, நகா்மன்றத் துணைத் தலைவா் எம். லியாகத்அலி, கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.