புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவில் மாணவிகளுக்கு பரிசளித்த மாவட்ட விளையாட்டு அலுவலா் செந்தில்குமாா்.
புதுக்கோட்டை
அரசுக் கல்லூரியில் விளையாட்டு விழா
புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவை புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் செந்தில்குமாா் தொடங்கி வைத்து, போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசளித்து பேசுகையில், விளையாட்டு வீராங்கனைகள் மட்டும்தான் தங்களின் எதிராளிகளையும் நேருக்கு நோ் சந்தித்து வெற்றி பெறும் மனப்பான்மையைக் கொண்டவா்களாக இருப்பாா்கள் என்றாா். விழாவில் மாணவிகளின் அணிவகுப்பும் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் முதல்வா் (பொ) ஞானஜோதி தலைமை வகித்தாா்.
முன்னதாக, விளையாட்டுத் துறை பொறுப்பு ஆசிரியா் காயத்திரி தேவி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா். முடிவில் விளையாட்டுத் துறைச் செயலா் ஆா்த்தி நன்றி கூறினாா்.