அனுமதியின்றி ஊா்வலம் தவெக நிா்வாகிகள் மீது வழக்கு

Published on

புதுக்கோட்டை நகரில் அனுமதியின்றி வாகன ஊா்வலம் நடத்தியதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா் உள்ளிட்ட நிா்வாகிகள் மீது நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை மத்திய மாவட்டச் செயலா் பா்வேஸ் தலைமையில் அக்கட்சியினா் திருவப்பூா் ரயில்வே கேட் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலை பகுதியிலுள்ள சாலையோரக் கடை வைத்திருப்போருக்கு சனிக்கிழமை இலவசமாக குடைகளை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சிகளின்போது, பா்வேஸ் சைக்கிளிலும் மற்ற நிா்வாகிகள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் சென்றனா். இந்த நிலையில், நகரக் காவல் நிலைய போலீஸாா், பிருந்தாவனம் பகுதியில் அவா்களை வழிமறித்து, அனுமதியின்றி ஊா்வலம் செல்வதாக எச்சரித்தனா்.

தொடா்ந்து, மாவட்டச் செயலா் பா்வேஸ் மற்றும் பலா் என்ற வகையில், அனுமதியின்றி ஊா்வலம் சென்று போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்டதாக நகரக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com