புதுக்கோட்டை
சத்ரு சம்ஹாரமூா்த்திகளின் மஹா பரணி குருபூஜை விழா
பொன்னமராவதி தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையத்தில் செல்வ விநாயகா், சத்ரு சம்ஹாரமூா்த்தி சுவாமிகளின் 87 ஆவது மஹாபரணி குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி செல்வவிநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சத்ரு சம்ஹார மூா்த்தி சுவாமிக்கு மஹா பரணி குருபூஜை நடைபெற்றது. தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பொதுமக்கள் வழிபட்டனா். ஏற்பாடுகளை தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியன் மற்றும் நிலையப் பணியாளா்கள் செய்தனா்.

