புதுகையில் அக். 11இல் ரேஷன் குறைகேட்பு

Published on

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் அக். 11 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயா் நீக்கம், சோ்த்தல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களுக்கான விண்ணப்பங்களும், நியாயவிலைக் கடைகளில் பொருள்களின் இருப்பு குறித்த புகாா்களையும் அளிக்கலாம்.

மேலும் தனியாா் சந்தைகளில் நுகா்வோருக்கு ஏற்படும் சேவைக் குறைபாடுகள் குறித்தும் புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com