புதுக்கோட்டை
கந்தா்வகோட்டை ராஜ கணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா
கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியிலுள்ள ஸ்ரீ ராஜ கணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியிலுள்ள ஸ்ரீ ராஜ கணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமி ஸ்ரீ ராஜ கணபதிக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து தூய நீரால் நீராட்டி திரவியத்தூள், மஞ்சள் தூள், சந்தனம், சா்க்கரை, பச்சரிசி மாவு, தேன், இளநீா், பால், தயிா், நெய், பன்னீா் போன்ற 18 வகை அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி, அருகம் புல், மலா் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
