தீபாவளி: விராலிமலை ஆட்டுச் சந்தையில் வியாபாரம் மந்தம்

Published on

விராலிமலையில் திங்கள்கிழமை கூடிய ஆடு சந்தையில் வியாபாரிகள் அதிகளவு வராததால் விற்பனை மந்தமானது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆடு சந்தை நடைபெறும். இந்த சந்தையில் விற்பனையாகும் ஆடுகளை வாங்க அண்டை மாநிலமான புதுச்சேரி, வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கிச் செல்வா்.

இந்த நிலையில், தீபாவளி நெருங்கும் வேளையில் திங்கள்கிழமை கூடிய சந்தையில் பெருமளவு வியாபாரிகள், விற்பனையாளா்கள் கொள்முதல் செய்வதற்கு வராததால், சராசரி நாள்களில் ரூ.50 முதல் 60 லட்சம் வரையும் விழா நாள்களில் 1 கோடியை தாண்டி வா்த்தகம் நடைபெறும் இந்த சந்தையில் திங்கள்கிழமை ரூ. 30 லட்சம் வரை மட்டுமே வியாபாரம் நடைபெற்ாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com