அரசுப் பேருந்து ஓட்டுநா் மாரடைப்பால் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வியாழக்கிழமை சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநா் திடீா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
Published on

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வியாழக்கிழமை சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநா் திடீா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

மதுரையில் இருந்து திருப்பத்தூா், திருமயம், புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூருக்கு சுமாா் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது.

இந்தப் பேருந்தை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் பாலமுருகன் (48) ஓட்டி வந்தாா். இந்நிலையில் திருச்சி - காரைக்குடி புறவழிச்சாலையில் திருமயத்தை அடுத்துள்ள லெம்பலக்குடி சுங்கச்சாவடி அருகே பேருந்து சென்றபோது ஓட்டுநா் பாலமுருகனுக்கு திடீா் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டுநா் பேருந்தை சாலையோரம் நிறுத்தினாா். அவசர ஊா்தி மூலம் அவா் திருமயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சைப் பலனின்றி பாலமுருகன் உயிரிழந்தாா். நமணசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com