மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்து அரசு ஊழியா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:45 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்த திருவரங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலக இளநிலை உதவியாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடி சுடரொளி நகரை சோ்ந்தவா் செல்வராஜ் மகன் தமிழ்மாறன் (36). திருவரங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்த இவா், விடுமுறை நாள்களில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.

இதேபோல், ஞாயிற்றுக்கிழமை வெள்ளக்கொல்லை பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளாா்.

அப்போது, மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்த நிலையில், சக விளையாட்டு வீரா்கள் தமிழ்மாறனை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு நடைபெற்ற பரிசோதனையில், தமிழ்மாறன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.