கும்பகோணம் யானையடி அய்யனார் கோயிலில் அக். 26-ல் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயில் திருமஞ்சனவீதியில் உள்ள அய்யனார் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதையொட்டி அக். 22ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து 24 முதல் 26ஆம் தேதி வரை யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு குடமுழுக்கு விழா செய்யப்படும். மேலும் அன்று மாலை சுவாமியின் வீதியுலா நடைபெறும்.
ஏற்பாடுகள் கோயில் செயல் அலுவலர் அசோக்குமார், பரம்பரை அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது.