கும்பகோணம் சக்கரபாணி சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.
பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் ஜூன் 9ஆம் தேதி காலை 11 மணிக்கு சிறப்பு சுதர்சன ஹோமம் மற்றும் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு ஸ்ரீசக்கரபாணி சுவாமி ஸ்ரீவிஜயவல்லி தாயார், ஸ்ரீசுதர்சனவல்லி தாயார் சமேதராக கோயில் வளாகத்தில் உள்ள அமிர்த புஷ்கரணி எனும் ஸ்ரீசக்கர புஷ்கரணியில் மின் ஒளி அலங்கார தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ஞானசேகரன் அறிவுரையின்படி கோயில் செயல் அலுவலர் ஜீவானந்தம், தக்கார் மதியழகன் மற்றும் சுதர்சன பக்தர்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.