தஞ்சாவூர் அருகேயுள்ள வண்ணாரப்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் செந்தில்குமார் (27). கட்டுமானத் தொழிலாளி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நாகம்மாளும் (60) மோட்டார் சைக்கிளில் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனர். வெட்டிக்காடு பிரிவு சாலையில் திரும்பிய இவர்களது மோட்டார் சைக்கிள் மீது திருச்சியிலிருந்து நாகை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் மோதியது.
இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த நாகம்மாள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.
இதுகுறித்து தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.