தஞ்சாவூர் மாநகர எல்லைக்குள் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை விரைவில் வரன்முறைப்படுத்த வேண்டும் என்றார் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் செளந்தரராஜன்.
மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அனுமதியில்லாத மனைப் பிரிவுகளை முறைப்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:
மாநகர எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை உடனே வரன்முறை செய்துகொள்ள காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு அரசு விதித்துள்ள தொகையைச் செலுத்தி, வரன்முறை செய்து கொள்ளலாம்.
ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள நில வரைபடத்தை அளித்து, அதை முறையாகப் பதிவுசெய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு, அரசாணைப்படி அதற்குரிய தொகையைச் செலுத்தி அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை வரன்முறை செய்து கொள்ளலாம்.
கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப்படி நிறைய இடங்கள் வரன்முறை செய்யப்பட்டுள்ளது. மாநகர எல்லையில் 15-க்கும் அதிகமான இடங்கள் வரன்முறை செய்யாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதை உரிய காலத்தில் வரன்முறை செய்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில் உதவி நகரமைப்பு அலுவலர் எம். ராஜசேகரன், உள்ளூர் திட்டக் குழும உதவி இயக்குநர் மூக்கையன், ரியல் எஸ்டேட் உரிமையாளர் சங்கத் தலைவர் குணசீலன், செயலர் பெரியமருது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.