தஞ்சாவூரில் புதன்கிழமை முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.
திருவையாறு அருகேயுள்ள உமையாள்புரத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி (47). எலக்ட்ரீசியன். இவர் புதன்கிழமை பிற்பகல் தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கோடியம்மன் கோயில் அருகே வந்த இவர்மீது, பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், பலத்த காயமடைந்த கோதண்டபாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தஞ்சாவூர் நகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.