அதிராம்பட்டினத்தில் டெங்கு தடுப்புப் பணிகள் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் சுப்பிரமணி அதிராம்பட்டினத்தில் கடற்கரைத் தெரு,  கரையூர் தெரு,  மேல நெசவுக்காரத்
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் சுப்பிரமணி அதிராம்பட்டினத்தில் கடற்கரைத் தெரு,  கரையூர் தெரு,  மேல நெசவுக்காரத் தெரு,  கீழத் தெரு உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் வீடு, வீடாகச் சென்று  அங்குள்ள மக்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

அதிரை  மாரியம்மன் கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். அங்கு அனைவருக்கும் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர்.அண்ணாதுரை மேற்பார்வையில் 40 பணியாளர்கள் நகர் முழுவதும் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்தப் பணிகளையும் டாக்டர் சுப்பிரமணி ஆய்வு செய்தார்.
அவருடன் பேரூராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் இளங்கோவன்,  மாவட்ட மலேரியா அலுவலர் போத்திப்பிள்ளை, வட்டார மருத்துவ அலுவலர் ஜி.அறிவழகன், ராஜாமடம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் வந்திருந்தனர்.
ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி ஆய்வு:  பட்டுக்கோட்டை மன்னை நகரில் ரூ. 68 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருவதை தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணி செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கட்டடத்தை தரமாகவும், சாய்தள படிக்கட்டு வசதியும், கழிவறைகளில் கால் வழுக்காத வகையில் சொரசொரப்பான தரைக்கற்கள் அமைக்கவும், பணிகளை குறித்த காலத்தில் முடிக்கவும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார்.
 ஆய்வின்போது,  பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் அலாவுதீன், நகரமைப்பு ஆய்வாளர் ஆர். கருப்பையன், பணி ஆய்வாளர் செந்தில், மருத்துவர்கள் பிரதீப்ராஜ்,  சுபாஷினி, உதவிக் கணக்கு அலுவலர் ஜெயராணி, ஒப்பந்ததாரர் கணேசன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணி கூறியது:காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். தண்ணீரை அதிகமாக பருக வேண்டும். தாங்களாகவே மருந்துக் கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிடக் கூடாது. வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றார்.  
இதைத் தொடர்ந்து,   பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தலைமை மருத்துவர் ராணி அசோகன், நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்டீபன் அந்தோனி, சுகாதார ஆய்வாளர்கள் ஆரோக்கியசாமி, அறிவழகன், ரவீந்திரன் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com