கும்பகோணம் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

கும்பகோணம் பகுதியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

கும்பகோணம் பகுதியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
கும்பகோணம் வட்டார வள மையத்துக்குட்பட்ட 6 வயது முதல் 18 வயது வரை பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் க.குமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தப் பணி கும்பகோணம் முல்லைநகர்,  கக்கன் காலனி,  ஏஆர்ஆர் காலனி,  மேலக்காவேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. அப்போது, பள்ளிச் செல்லாத குழந்தைகள் 3 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் எதிர்கால கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்து வரும் கல்வியாண்டில் பள்ளியில் சேர்க்க உரிய அறிவுறுத்தப்பட்டது. இதில் ஆசிரியப் பயிற்றுநர்கள் விஜிதா, சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com