கும்பகோணம் அருகே வலையப்பேட்டை கிராமத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடாஜலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வலையப்பேட்டை கிராம சமுதாய கூடத்தில் ஏப். 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுகிறது.
இதில் வலையப்பேட்டை, சுவாமிமலை, பாபுராஜபுரம், கொட்டையூர், தாராசுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை நேரில் மனுவாக வழங்கி பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.