147 குடும்பங்களுக்கு நிவாரண உதவி

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 147 குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் 22 பொருள்கள் அடங்கிய நிவாரண


பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 147 குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் 22 பொருள்கள் அடங்கிய நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
பாபநாசம் வட்டார பகுதியில் அண்மையில் வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட 147 குடும்பங்களுக்கு பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கராஜ், 22 பொருள்கள் அடங்கிய நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதில் மண்டல துணை வட்டாட்சியர்கள், சரக வருவாய் அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com