பாபநாசம் அருகே குழந்தை வளர்ப்பு கருத்தரங்கு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர் ஊராட்சிக்குள்பட்ட சமூகசேவை மைய கட்டட வளாகத்தில் அம்மாபேட்டை வட்டார ஒருங்கிணைந்த


தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர் ஊராட்சிக்குள்பட்ட சமூகசேவை மைய கட்டட வளாகத்தில் அம்மாபேட்டை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் குழந்தை வளர்ப்பு தொடர்பான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, அம்மாபேட்டை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் எம். காஞ்சனா தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ஏ. அஜந்தன் கருத்தரங்கை தொடக்கி வைத்தார். கருத்தரங்கில், புதுமணத் தம்பதியருக்கான மருத்துவ ஆலோசனை, ஆரோக்கியமான குழந்தை பெறுதல், குழந்தை வளர்ப்பு உள்ளிட்டவை குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் மருத்துவ ஆலோசனை கையேடு, மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் சுகாதார மேற்பார்வையாளர் அசோக்குமார், மேற்பார்வையாளர் சித்ரா, கிராம சுகாதார செவிலியர் மோகனசுந்தரி, பகுதி சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com