ஜயேந்திரருக்கு மலரஞ்சலி

அண்மையில் முத்தியடைந்த காஞ்சி சங்கர மடத்தின் 69 ஆவது பீடாதிபதியான ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மலரஞ்சலி செய்து,  மரியாதை செலுத்தப்பட்டது.

அண்மையில் முத்தியடைந்த காஞ்சி சங்கர மடத்தின் 69 ஆவது பீடாதிபதியான ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மலரஞ்சலி செய்து,  மரியாதை செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர் ஜெயந்திராள் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நிறுவனத்தின் தலைவர் டி. ஜெகத்ரட்சகன் தலைமை வகித்தார். செயலாளர் எஸ். கஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில்,  முத்தியடைந்த ஜயேந்திரரின் திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து 2 நிமிஷங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், சத்திரம் மேலாளர் குயின்டின் ராஜ், ஜனக்கல்யாண் உறுப்பினர் களஞ்சேரி கே. முருகேசன், சமூக ஆர்வலர் ஆர். மதனகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com