தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மார்ச் 15) காலை 10 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புக் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு வருவாய் வட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை நேரடியாக அளிக்கலாம். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் தொடர்புடைய அலுவலர்களால் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும். எனவே இந்த வாய்ப்பை தஞ்சாவூர் வருவாய் கோட்டத்தை சார்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362-236791 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.