உழவு இயந்திரம் கவிழ்ந்து ஓட்டுநர் சாவு

தஞ்சாவூர் அருகே உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் காயமடைந்த ஓட்டுநர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

தஞ்சாவூர் அருகே உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் காயமடைந்த ஓட்டுநர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் கரந்தை கொடிக்காலூரைச் சேர்ந்தவர் எஸ்.பால்ராஜ் (43). உழவு இயந்திர ஓட்டுநரான இவர் கடந்த புதன்கிழமை (அக். 10) பத்துக்கட்டுக் கிராமத்தில் வயலில் உழவு இயந்திரத்தை ஓட்டினார். 
அப்போது, இவர் மீது இயந்திரம் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால்ராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com