தஞ்சாவூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை மங்களபுரம் அருகே சுந்தரம்நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மனைவி விமலா(45). கடந்த புதன்கிழமை (அக்.10) புறவழிச்சாலை மேம்பாலம் முன்பு விமலா காரை ஓட்டிச் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
பலத்தக் காயத்துடன் தனியார் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட விமலா உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.