பட்டுக்கோட்டையில் மறைந்த சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனருக்கு புகழஞ்சலிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கவிஞர் கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பட்டுக்கோட்டை தமிழ்ச் சங்கச் செயலர் ந.மணிமுத்து தலைமை வகித்தார். பேராசிரியர் கோ.சந்திரசேகரன், பி.சுந்தரம், வழக்குரைஞர் சு. செந்தமிழ்ச்செல்வன், சி.ராமசாமி, பி.ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.