தஞ்சாவூர் யாகப்பா பள்ளி மற்றும் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர் தலைவர்கள் பொறுப்பேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஞானம் மேலாண்மைப் பள்ளி நிர்வாக இயக்குநர் எஸ்.பி.எஸ்.அருள்தாஸ் மாணவர் தலைவர்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில், யாகப்பா பள்ளி மாணவர் தலைவராக ஆரன், யாகப்பா உண்டு உறைவிடப் பள்ளி மாணவர் தலைவராக ஹரிஈஸ்வர், நான்கு அணி தலைவர்களாக ஜெயந்த் , ஜனனி , அஸ்வின், அசிதா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பள்ளி அறங்காவலர் மேரி ஞானம், நிர்வாக இயக்குநர் கெய்சர் அருள் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.