திருப்புறம்பியம் பிரளயம் காத்த விநாயகருக்கு செப் 13-இல் விடிய விடிய தேனாபிஷேகம்

கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம் பிரளயம் காத்த விநாயகருக்கு  செப்டம்பர் 13 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று

கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம் பிரளயம் காத்த விநாயகருக்கு  செப்டம்பர் 13 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று இரவு முழுவதும் தேனாபிஷேகம் நடைபெற உள்ளது. 
திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாதசுவாமி கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் தேனாபிஷேக பெருமான் என்றழைக்கப்படும் பிரளயம் காத்த விநாயகர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே தேனாபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் அபிஷேகம் கிடையாது. விநாயகர் சதுர்த்தி திருநாளில் மாலை தொடங்கி விடிய விடிய தேனால் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம்  செய்யப்படும் தேனானது, விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுவதும், அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தருவதும் இன்றும் கண்கூடாக நிகழ்ந்து வருகிறது.
அதன்படி, நிகழாண்டு விநாயகர் சதுர்த்தியன்று (செப். 13) மாலையில் மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. 14 ஆம் தேதி அதிகாலை வரை தேனாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, திருப்புறம்பியத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com