அம்மாசத்திரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

கும்பகோணத்தை அடுத்த அம்மாசத்திரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

கும்பகோணத்தை அடுத்த அம்மாசத்திரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு வட்டாட்சியர் ந. வெங்கடாசலம் தலைமை வகித்தார். நிலவள வங்கி தலைவர் அறிவழகன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன்,  மண்டல துணை வட்டாட்சியர் விவேகானந்தன்,  சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுசிலா உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில்,  பொதுமக்களிடமிருந்து 20 கோரிக்கை 20 மனுக்கள் பெறப்பட்டு,  9 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் அந்தந்த துறைகளின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com